சாலை வசதி வேண்டும்

Update: 2026-08-23 12:15 GMT

பெரம்பலூர் வட்டம் ஆலம்பாடி ரோடு அமராவதி நகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஆலம்பாடி சாலையில் இருந்து ஊருக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அமராவதி நகர் பகுதியில் உடனடியாக சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்