உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணையை தழுவியவாறு செல்லும் இந்த சாலையில் பாலாற்றின் குறுக்கே தரைமட்டப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் சமீப காலமாக இரவு நேரத்தில் போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு போதை தலைக்கு ஏறியவுடன் மது பாட்டில்களை உடைத்து வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக உடைந்த பாட்டில் துண்டுகள் சிறிய ரக வாகனங்களின் சக்கரங்களை பதம் பார்த்து விடுவதால் அவை பழுதடைந்து நின்று விடுகிறது. மேலும், இரவு நேரத்தில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் தேடி பாலத்தில் வருகின்ற வனவிலங்குகளின் பாதங்களும் இந்த பாட்டில் துண்டுகளால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே பாட்டில்களை அகற்றி, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
கிருஷ்ணன், உடுமலை.