செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஏரி அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள மரங்கள், பாலத்தில் செல்லும் வாகனங்கள் மீது உரசுவது போன்ற ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்துநடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.