திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தொழிற்பேட்டை அருகே சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் அவை சரிவர மூடப்படாததால் மழைபெய்து மழைநீர் தேங்கி நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்பரவும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இந்த பள்ளங்கள் இடையூறாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.