சூலூர் அருகே கண்ணம்பாளையம்-கலங்கல் இடையே மண்சாலை இருந்தது. அந்த சாலையை தார்சாலையாக மாற்றினார்கள். ஆனால் சில நாட்களிலேயே குழாய் பதிக்க அந்த சாலையை தோண்டிவிட்டனர். இதுபோன்றுதான் கோவையில் பல சாலைகளில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகிறது. எனவே சாலையை சீரமைப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன்பாக குழாய் பதிக்கும் பணிகளை முடிக்க வேண்டும். இதனால் அரசு பணம் வீணாவது தடுக்கப்படும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.