கோவை மாநகர பகுதியில் பல்வேறு சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவை விபத்துகளை தடுக்க அமைக்கப்பட்டு இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக சாலையோரத்தில் அறிவிப்பு பலகை வைப்பதோ அல்லது வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசுவதோ இல்லை. இதனால் பல இடங்களில் சாலைகளில் வேகத்தடைகள் இருப்பதே தெரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த பிரச்சிைனக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.