புழுதி பறக்கும் சாலை

Update: 2026-07-26 13:46 GMT

கோவை-சத்தி சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அத்துடன் இருபுறத்திலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதனால் சாலையின் இருபுறத்திலும் மண் குவிந்து கிடக்கிறது. பலத்த காற்று வீசும்போதும், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போதும் அந்த மண் புழுதி போன்று பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே அந்த சாலையில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்