சென்னை அண்ணாசாலை பின்னி சாலையில் எப்போதும் பரபரப்பான சாலை. இதன் அருகே கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதால், பொதுமக்களும், கல்லூரி செல்லும் மாணவிகளும் அந்த சாலையின் நடைபாதை வழியாக நடந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லவேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.