தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பாளையம் கிராமத்தில் தீர்த்தமலை காப்பு காட்டையொட்டி 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் இருந்து வரும் பரமசிவம் பாதையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதை மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் 2 கி.மீ. நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே வனத்தை ஒட்டி உள்ள காப்புகாட்டில் பாதை வசதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.