கிருஷ்ணகிரி 32-வது வார்டு வள்ளலார் தெருவில் பாதாள சாக்கடைக்காக சாலை தோண்டப்பட்டு 6 மாதங்கள் ஆகிறது. பின்னர் அந்த பணி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வயதானவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே காலதாமதம் இன்றி சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.