சேதமடைந்த சாலை

Update: 2026-06-14 12:43 GMT

தலக்குளம் ஊராட்சியில் புதுவிளை பாலம் முதல் தலக்குளம் மேலத்தெரு வரை செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும்.

-மூர்த்தி, தலக்குளம்.

மேலும் செய்திகள்