விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?