பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2026-06-07 16:33 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 4 ரோடு செல்லும் வழியில் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் நாள்தோறும் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் சிக்கி காயமடைகின்றனர். இது ஒரு தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. தற்போது அந்த பள்ளத்தில் பொதுமக்கள் மண், கற்களை வைத்து சமப்படுத்தியுள்ளனர். எனவே பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். மேலும் அதே இடத்தில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறை தண்ணீர் வினியோகம் செய்யும் போதும் அதிகளவில் தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. இவ்வாறு தண்ணீர் சாலையில் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்