பள்ளமாக மாறிய தார்சாலை

Update: 2026-06-07 15:43 GMT

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. சின்னா கவுண்டம்பட்டி-பொம்பட்டி சாலையிலிருந்து ஆசாரி தெரு வழியாக போளையம்பள்ளி இணைப்பு சாலை வரை சுமார் 1½ கிலோமீட்டர் தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமான சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்