மோகனூர் அடுத்த அரூர்-ரெட்டையம்பட்டி (வளையப்பட்டி) நெடுஞ்சாலையில், அரூர் மற்றும் ரெட்டையம்பட்டி ஆகிய இடங்களில் மழைநீர் ஓடும் 2 பாலங்கள் உள்ளன. இவை மிக குறுகிய பாலங்களாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 2 பாலங்களையும் அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.