குளச்சல் பகுதியில் இரும்பிலிக்கரை ஊரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஒத்தயடி பாதையை பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் குளத்தின் கரையை கடப்பது மிகவும் ஆபத்து நிறைந்துள்ளது. உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள் ஏற்றிச்செல்ல வாகனங்கள் அந்த பகுதிக்கு வருவதற்கும் சாலை வசதியில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயக்குமார், இரும்பிலிக்கரை.