குலசேகரம் அரசமூடு பகுதியில் இருந்து சுருளக்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மங்களம், அரசுமூடு இறக்கம் ஆகிய பகுதிகளில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அலெக்ஸ் மேத்யூ, பொன்மனை.