நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் குடிநீர் இணைப்பிற்காக பள்ளம் தோண்டபட்டு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்க ஜல்லிகள் போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால் பாதகாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி ‘தினந்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-லட்சுமணன் குமார், கிருஷ்ணன்கோவில்.