குண்டும், குழியுமான சாலை

Update: 2026-05-31 10:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு, சமத்துவபுரம், அடபண்வயல் பகுதிகளை இணைக்கும் தார்சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இப்பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி நடந்த செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்