சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக அப்பகுதியில் உள்ள குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் அடிக்கடி சென்று வருகின்றன. இதனால், சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், அப்பகுதியில் சாரல் மழை பெய்தாலே குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அந்த சாலை சேரும், சகதியுமாக மாறி விடுகிறது. அப்போது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஊராட்சி அலுவலகம் முன்பாக உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.