அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள், பஸ்கள் அரியலரூக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் புத்தூர் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்க நுழைவுவாயிலின் கிழக்கு புறத்தில் உள்ள ஆபத்தான வளைவு பகுதியில் நீண்ட தூரத்திற்கு கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. மேலும் வேகத்தடையும் இல்லாததால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே கருவேல மரங்களை அகற்றி, வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.