கோவை திருச்சி சாலையில் ராஜலட்சுமி மில்ஸ் பஸ் நிறுத்தம் முதல் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பிரிவு வரை மற்றும் கதிர் மில்ஸ் பஸ் நிறுத்தம் முதல் சூலூர் ஏரோ கேட் வரை சாலையை விரிவுபடுத்தி தர வேண்டும். ஏனென்றால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆங்காங்கே விபத்துகள் அரங்கேறி வருகின்றன. சாலையை விரிவுபடுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.