அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் வரை தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிது. இதனால் ஒரு பகுதி முழுவதும் சாலை தோண்டி பணி நடைபெறுவதால், வாகனங்கள் அனைத்தும் ஒரே பக்கமாகவே செல்ல வேண்டி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.