புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா காரையூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைக்கு காரையூர், கீழத்தானியம், ஆலம்பட்டி, மறவாமதுரை, இடையாத்தூர், அரசமலை, கூடலூர், நல்லூர், வாழைக்குறிச்சி, நெருஞ்சிகுடி, கொன்னையம்பட்டி, சேரனூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 100-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உடல்நிலை சரியில்லை என்றால் வந்து செல்லும் மருத்துவமனையாக உள்ளது. இந்நிலையில் தார்சாலையில் இருந்து மருத்துவமனை கட்டிடம் வரை மண்சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த மருத்துவமனை வளாகத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.