கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி மெயின் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் இந்த வளைவில் திரும்பும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகமாக செல்வதினால், அவர்கள் இந்த வளைவு பகுதியில் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.