கற்கள் அகற்றப்படுமா?

Update: 2026-05-10 08:10 GMT

குலசேகரம் பிரதான சாலையில் ஆரணி விளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கல்விக் கூடங்கள், ஆஸ்பத்திரிகள் திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதி பகலில் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்கு சாலையோரம் வடிகால் ஓடையின் மீது மூடப்பட வேண்டிய கற்கள் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடயூறாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள்,பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரம் கிடக்கும் கற்களை மழைநீர் வடிகால் ஓடை மீது அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவ சகாயம், குலசேகரம்.

மேலும் செய்திகள்