சேறும் சகதியுமான சாலை

Update: 2026-05-03 14:10 GMT

மதுரை நகர் அவனியாபுரம் அருகே உள்ள காவேரி தெரு பகுதியில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் கோடை மழையால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமமடைவதோடு வாகன ஓட்டிகளும் இதில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்கள் நலன் கருதி மேற்கண்ட தெருவில் புதிய தார்ச்சாலை அமைத்து தர முன்வர வேண்டும். 

 



மேலும் செய்திகள்