பாதசாரிகள் அவதி

Update: 2026-05-03 12:52 GMT

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து நகராட்சி பூங்கா ஓரமாக பாதசாரிகள் செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பகுதியில் கார்கள் நிறுத்துவதற்காக நடைபதை அகற்றப்பட்டுள்ளது. இதனால் வேப்பமூடு பகுதியில் இருந்து அண்ணா பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் சாலையை கடந்து மறுபுறமாக உள்ள நடைபாதைக்கு வந்து செல்லவேண்டும். ஆனால் முக்கிய சந்திப்பு பகுதி என்பதால் பாதசாரிகள் சாலையை கடக்க பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த சந்திப்பு பகுதியில் பாதசாரிகள் கடந்து செல்ல சாலையில் குறியீடுகள் வரைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்