சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை- செட்டிகுளம் இடையே சாலை நடுவில் புதிய ஓடைப்பாலம் கட்டப்பட்டது. அங்கு பாலத்தின் இருபுறமும் தார்சாலை அமைக்காததால், ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையின் இருபுறமும் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.