ஈரோடு ஆண்டவர் வீதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடிவதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?