வெண்ணந்தூர் அடுத்து மாட்டுவேலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அறமத்தாபாளையம் செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருந்தது. இந்தநிலையில் தார்சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன. பின்னர் அந்த பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனால் பல மாதங்களாக ஜல்லிக்கற்கள் பரப்பிய சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?