சேலம் அஸ்தம்பட்டி காந்தி சாலையில் காலை முதல் மாலை வரை வாகனங்கள் அதிகம் செல்கின்றன. இந்தநிலையில் அந்த சாலையில் சாலையோர கடைகள் அதிகரித்து உள்ளன. மேலும் வாகன ஓட்டிகள் சிலர் வாகனங்களை சாலையையொட்டி நிறுத்திவிட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.