போக்குவரத்து பாதிப்பு

Update: 2026-03-08 10:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து திருவெறும்பூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தனியார் வணிக கட்டிடம் முன்பு சாலையை ஆக்கிரமித்தவாறு கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்