மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி நகர், விவேகானந்தர் 2-வது குறுக்கு தெருவில் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த சாலையில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.