மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள வடம்பெரும்பாக்கத்தில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்த சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள், விபத்து உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.