அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் இருந்து இளையபெருமாள் நல்லூர் கிராமம் மற்றும் சத்திரம் கிராமத்திற்கு செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள தார்சாலை சேதமடைந்து நீண்ட காலமாகியும், இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.