குடகனாற்று பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்

Update: 2026-03-01 11:07 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஓரங்களில் ஆங்காங்கே கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு கம்பிகள் இல்லாமல் உள்ளது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் இங்குள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த பாலத்தையே பயன்படுத்துவதால், இந்த பாலத்தில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் தடுப்பு கம்பிகள் இல்லாததால், வாகனங்கள் சற்று நிலைதடுமாறினால், கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்