பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு ஈஸ்வரநாயக்கர் தெருவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளம் இருப்பது தெரிவதற்காக அப்பகுதியில் மரக்கிளை கொப்புகளை பொதுமக்கள் நட்டு வைத்துள்ளனர். விபத்து ஏற்படுவதற்குள் பள்ளத்தை விரைந்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.