வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-02-22 14:47 GMT

புதுக்கோட்டை-தஞ்சை சாலை முள்ளூர் கிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இங்கு தஞ்சை, திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை நகரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வரும் நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்