அரியலூர் மார்க்கெட் தெருவில் பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் தேரடியில் இருந்து அண்ணா சிலை வரை சாலையை ஆக்கிரமித்தவாறு சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.