கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் அதிக அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பஸ் நிலையம் வரையில் டான்சி, வனத்துறை அலுவலகம், பள்ளிகள் அருகில் என அதிகமாக வேகத்தடைகள் உள்ளன. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பலருக்கும் அந்த வேகத்தடைகள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தேவையற்ற வேகத்தடைகளை அகற்றிடவோ அல்லது வேகத்தடைகள் இருப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அதன் மீது வர்ணம் பூசி, இரவில் ஒளிரும் விளக்குகளை பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.