மூலனூர் அருகே கன்னிவாடி முதல் எரசப்பாடி வரை உள்ள சாலையில் ஆண்டாள் நகர் உள்ளது. இந்த ஆண்டாள் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையை ஆக்கிரமித்தவாறு முட்புதர்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலையை திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகுமார், கன்னிவாடி.