தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை சங்கரன் தெரு தெற்கு பிரிவில் குண்டும்,குழியுமாக சாலையால் கடந்த சில நாட்களாக அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன.. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அதிக அளவில் இதில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அரசு பள்ளி ஆசிரியரின் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.