பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி ஊராட்சி சித்திரப்பட்டியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளி, வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த சித்திரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அபாயகரமான வளைவான பாதை உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த சாலையில் சிலர் வாகனங்களில் வேகமாக செல்கின்றனர். இந்த இடத்தில் 2 வேகத்தடைகள் அமைக்கவும், விபத்து எச்சரிக்கை பலகை வைக்கவும் கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்குமோ?