கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நகர எல்லையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் கரூரில் இருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அரவக்குறிச்சி நகர எல்லைக்குள் நுழையும்போது அதிவேகமாக செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அரவக்குறிச்சி சி.எஸ்.ஐ. தேவாலயம் முன்பு வேகத்தடை அமைத்து அரவக்குறிச்சிக்குள் வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.