புலியகுளம் விநாயகர் கோவிலின் எதிரே சில அடி தூரத்தில் சவுரிபாளையம் செல்லும் சாலையின் நடுவே சிறிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகிறது. எனவே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் அந்த பள்ளத்தை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.