குஜிலியம்பாறை தாலுகா செட்டியப்பட்டி புதூரில் இருந்து அரவக்குறிச்சி வரை உள்ள சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. தற்போது அந்த சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் மட்டும் மணலை கொட்டி மூடப்பட்டுள்ளன. ஆனால் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.