கெலமங்கலம் அடுத்த செட்டிப்பள்ளி ஊராட்சியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் மாருதி நகரில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.