தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பழைய பாலம் அகலம் குறைவாகவும், சேதமடைந்த நிலையிலும் உள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் புதுக்கோட்டை நகருக்குள் பஸ்கள் வருவதில்லை. அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்தும் இ்ன்னும் பணிகள் தொடங்கவில்லை. எனவே அங்கு புதிய உயர்மட்டம் பாலம் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.