நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் அருகில் வலது புறத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தின் முன் சேதமடைந்த சாலையை முறையாக சீரமைக்காததால் மேடும், பள்ளமுமாக உள்ளது. இதேபோல் இந்த சாலையின் பல இடங்களில் முறையாக சீரமைக்காததால் இதேபோல் காணப்படுகிறது. இதனால் வேகமாக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழுந்து நிலைதடுமாறி எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் அந்த சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டணி சதீஷ், ஆசாரிபள்ளம்.